states

img

பின்தங்கிய நிலையில் உள்ள அயோத்தியும் அம்பலமான மோடி அரசின் தம்பட்டமும்

அயோத்தி ராமர் கோவில் பிர திஷ்டை விழா இன்று நடைபெறு கிறது. இந்த நிலையில் ரூ.28,000  கோடி மதிப்பிலான 252 திட்டங்கள் அயோத்தியில் நிறைவேற்றப் பட்டுள்ளன என மோடி அரசு தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. ஆனால் அயோத்தி மாவட்டம் பொருளாதாரம், கல்வி, ஆரோக்கியத்தில் பின் தங்கி யே உள்ளது என்பதை பின்வரும் தரவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

 அயோத்தியின் மொத்தப் பரப்பு  2522.0 ச.கி.மீ. கிராமம்- 2459.88 ச.கி.மீ,  நகர்ப்புறம்- : 62.12 ச.கி.மீ.  இங்கு இந்தி  (அவதி) பிரதான மொழியாகஉள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அயோத்தி மக்கள் தொகை 25 லட்சத்திற்கும் குறை வாகவே இருந்தது, உத்தரப்பிரதேச த்தின் மொத்த மக்கள் தொகையில் அயோத்தியின் மக்கள் தொகை 1.24 சதவீதம்.  மாவட்டத்தில் பட்டியல் சாதி யினர் 22.46 சதவீதம் பேர் உள்ளனர். ரூ.28,000 கோடி மதிப்பிலான 252 திட்டங்கள் அயோத்தியில் நிறை வேற்றப்பட்டுள்ளன.

அயோத்தியில் மொத்தம் 13 கி.மீ தூரம் கொண்ட நான்கு பிரதான சாலைகள் ராமர் பாதை,  தரம் பாதை, பக்தி பாதை மற்றும் ஸ்ரீ ராம் ஜன்மபூமி பாதை என பெயர் மாற்றப்பட்டுள்ளன.

தனிநபர் வருமானத்தில்  48 ஆவது இடம்
அயோத்தி மாவட்டத்தின் உள்ளூர்  உற்பத்தியானது உத்தரப் பிரதேசத்தின் மொத்த மாநில உள் உற்பத்தியான ரூ.11.81 லட்சம் கோடியில் வெறும்  0.94 சதவீதம் மட்டுமே. தனிநபர் வரு மான அடிப்படையில், உத்தரப்பிர தேசத்தில் உள்ள  75 மாவட்டங்களில் அயோத்தி 48-ஆவது இடத்தில் உள்ளது.

இரத்தச்சோகை  பாதிப்பு  66 சதவீதம்

2019-21-ஆம் ஆண்டு  தேசிய குடும்ப நல ஆய்வு-5 இன்  தரவுகள் அடிப்படையில், அயோத்தி மாவட்டத் தில் 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில் பாதிப் பேர் இரத்த சோகை யால் பாதிக்கப்பட்டுள்ளனர். அயோத்தியில் 60.7 சதவீத பெண்கள் இரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டுள்  ளனர். 2015-2016-ஆம் ஆண்டோடு ஒப்பிட் டால் பெண்களிடையே இரத்தச் சோகை பாதிப்பு குறைந்துள்ளதாம். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2019-21-இல் 15-49 வயதுக்குட்பட்ட பெண்களில் 50.4 சதவீதம் பேர் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்,

 6 மாதம் முதல் 59 மாதம் வயது டைய குழந்தைகளிடையே இரத்தச் சோகை பாதிப்பு அதிகமாக உள்ளது. தேசிய குடும்ப நல ஆய்வு-5 இன்  தரவுகள் அடிப்படையில், 2019-21-இல்  57.7 சதவீதக் குழந்தைகள் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 66.4 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கல்வியில் பின்தங்கிய நிலை
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அயோத்தியில் ஆண் மற்றும் பெண் கல்வியறிவு முறையே 78.12 சதவீதம் மற்றும் 59.03 சதவீதம் எனப் பதிவாகியுள்ளது. 2011-இல் மாவட்டத்தில் ஒட்டுமொத்த கல்வியறிவு விகிதம் 68.73 சதவீதமாக இருந்தது. பட்டியல் சாதியினரின் கல்வியறிவு விகிதம் 57.35 சதவீதமாக பதிவாகியுள்ளது, இது மாநிலத்தின் சராசரியான 60.89 சதவீதத்தை விடக் குறைவு. 

ஆசிரியர்-மாணவர்  விகிதம் கடும் வீழ்ச்சி
மாவட்டத்தின் ஆரம்பப் பள்ளி (வகுப்பு 1 முதல் 5 வரை) மாணவர்-ஆசி ரியர் விகிதம் 2011-12-இல் அதிகபட்சம் 52.52 ஆக இருந்து 2020-21-இல் வெகு வாகக் குறைந்துள்ளது. இது மாநில சராசரியான 26.97-ஐ விடக் குறைவு. 6-ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை மாணவர்-ஆசிரியர் விகிதம் 2020-21-இல் 24.59 ஆக இருந்தது.

சராசரியை விட குறைந்த உணவு உற்பத்தி
அயோத்தியில் தனிநபர் உணவு தானிய உற்பத்தி 2011-12 இல் 227.61 கிலோ. இது 2020-21-இல் உயர்ந்தது.  இருப்பினும் மாநில சராசரியான உற்பத்தியான 268 கிலோவை விட குறைவு. 2017-18-இல் அயோத்தியில் தொழில்துறை உற்பத்தியின் தனிநபர் மொத்த மதிப்பு மாநில சராசரியான ரூ.216 லட்சத்தை விட மிகவும் குறைவாக இருந்தது.

பாதிக்கப்படும் ஆயிரக்கணக்கான  நோயாளிகள் 
அயோத்தி ராமர் கோவில் விழாவை யொட்டி தில்லியில் உள்ள எய்ம்ஸ், தில்லி, சப்தர்ஜங் மருத்துவமனை மற்றும் ராம் மனோகர் லோஹியா ஜன வரி  22-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால் இந்த மருத்துவ மனைகளில் நடைபெறவிருந்த 1,200 அறுவை சிகிச்சைகள் பாதிக்கப்படும் என்று தி வயர்ஸ்  செய்தியாளர் பன் ஜோத் கவுர் மதிப்பீடு செய்துள்ளார்.

இந்த நான்கு மருத்துவமனைகளில் மட்டும் 32 ஆயிரம் நோயாளிகள் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெறு பவர்கள். கடைசி நேரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும் விடுமுறை அறிவிப்பை திரும்பப்  பெற்றுள்ளது.